உயிரை உருக்கி மெய்யை வருத்தி உயிர்மெய்யாய் என்னை உலகில் ஈன்றவள் அம்மா ! அச்சொல்லின் ரீங்காரம் ஒன்று போதுமே உலகின் உயிர்கள் யாவும் அசையுமே பேசும் மொழிகள் பலவாயினும் எவரும் உணரும் மொழி அம்மா ! கருவறையிலே என் சுமைதன்னில் சுகம் கண்டவள் உலகறியா என்னிடம் உலவளாவியவள் கண்களால் காணாத போதும் என்னையே உலகாய் கொண்டவள் என் பிஞ்சுக்கால் மிதியின் வலி அறியாதவள் அம்மா ! நான் பிறக்க தான் மறுஜென்மம் கொண்டவள் என் நலம் காக்க தன்நலம் துறந்தவள் நான் பசி ஆற தன் பசி மறந்தவள் என் பிணி கண்டு இறைவனையே ஏசியவள் அம்மா ! நான் நடை பயில கைத்தடியாகி என் முகம் மலர இசையாகி நான் வந்த பாதையில் மலராகி என் வலி ஏற்று தன் வலி மறப்பவள் அம்மா ! நான் போற்றும் முதல் பெண்ணே ! என் வாழ்வின் தேவதையே நான் கண்ட கனவை தன் கனவாக்கிய என் தாயே ! ................யாவும் நீயே ! ............. அம்மா ! ...
கலக்கம் கொண்ட மனது சிறு தனிமைக்கும் வாடுமே... தனிமை தீண்டும் போதெல்லாம் வார்த்தைகள் தடுமாறுமே... வார்த்தைகள் தடுமாறும் போதெல்லாம் மௌனத்தின் நிழலாடுமே... மௌனத்தின் நிழல் படியும் போதெல்லாம் கண்களும் வியர்வையால் துளிர்க்குமே... கண்கள் நீரில் துளிர்க்கையில் கனவுகள் கேள்வி ஆகுமே... கனவுகள் கலையும் போதெல்லாம் மனதினில் வெற்றிடம் தோன்றுமே... மனது வெற்றிடம் ஆகுகையில் தமை தாங்கும் தோளை தேடுமே... தமை தாங்கும் தோளும் கிடைக்கையில் நம்பிக்கை வேரை ஊன்றுமே... நம்பிக்கை நெஞ்சில் துளிர்க்கையில் நல்ல விடியல் நாளை பிறக்குமே... என்றும் அன்புடன், ...
அடடே... என் குட்டி அழகே! நீ பெண் பிள்ளை என்று சிலர்... நீ ஆண் பிள்ளை என்று பலர்... எனக்கோ நீ எங்கள் பிள்ளை ஆயிற்றே! இதில் ஆண் என்ன! பெண் என்ன!! முதல் மூன்று மாதங்களில் உண்டா இல்லையா என்று எப்படி அலைக்கழிக்க வைத்தாய்! விளம்பரங்களில் வீடியோக்களில் எல்லாம் உறுதி செய்யும் அந்த சிறு கிட்-டை கூட ஏமாற்றிய குறும்பு அல்லவா நீ! திருமணம் முடிந்ததிலேயே சந்தேகம் தீராத உன் அம்மா அப்பா-விற்கு உன் வருகைக்கு ஒரு வழியாக க்ரீன் சிக்னல் கிடைத்தது! முதல் முறையாக ஸ்கேனில் உன் வளர்ந்து வரும் தோற்றம் கண்டு அதிசயித்து போனோம்... எங்கள் குட்டி உலகமாகிய உன் இருதய ஒளி கேட்டு எங்கள் இருதயம் துடிக்க மறந்து கண்கள் கூடே நீர்த்து போனது! ஐந்து மாதங்கள் கடந்த பின்னரும் கூட என் குட்டி தொப்பைக்குள் இருந்து கொண்டு இன்னமும் கண்ணாமூச்சி காட்டினாய்! அவ்வப்போது வரும் வாந்தி மயக்கம் கொண்டு என்னை நானே உறுதி செய்து கொண்டேன்... ஆம் நான் உன்னை சுமக்கிறேன் என்று!! ஏழு மாதங்கள் கடந்து வயிற்றில் உன் அசைவை சரியாக நாங்கள் உணர்ந்த போது, ஆகா! அதை வர்ணிக்க வார்த்தைகள் தான் ஏது? எத்தனை ஆட்டம் காட்டினாய்... "வெளிய...
பெண்ணே!!! வா... மாலையாய் மலர்ந்து வா! வரும் தடைகள் பலவாயினும் அவை அனைத்தும் தாண்டி வா! வாழ்க்கையே தடம் புரண்டாலும் அதையும் ஏற்ப்பாய் முயன்று வா! உறவுகள் நிறம் மாறினாலும் உன் நிறம் மாற்றாத நிலவே வா! உன் கனவுகள் களைந்தோடினாலும் நாளைய விடியல் உனக்காக வா! ஏறும் படிக்கட்டுகள் சரிந்தாலும் மேடு பள்ளங்களை கடந்தே வா! விரியும் சிறகினை பிடுங்கி எறிந்தாலும் வீசும் தென்றலில் மிதந்தே வா! சூரியன் தன் கதிர்களை மறைத்தாலும் மின்னும் மின்மினிக்கள் மின்னும் வா! அவையாவும் ஒருவேளை மறைந்தாலும் வரும் பௌர்ணமி உனக்காக வா! என்றேனும் தொடுவாய் சிகரம் மிடுக்காய் முயன்று முன்னேறி வா!!! அன்புடன், ...
இன்று ஏனோ தனிமையில் என் மனம்.... எதை நாடுதோ... எதை தேடுதோ... மனித வாழ்க்கையே புரியாத புதிரல்லவா...! அதன் விடையை எளிதில் கண்டவர் தான் யார்...! நானும் அதற்காகவே முயல்கிறேன்... பதிலோ "கிடைப்பேனா?" என்கிறது... மனமோ "தேடுவதை விடுவாயோ? " என தவிக்கிறது... விதியோ "உன்னை விடுவேனோ?" என நகைக்கிறது... நானோ 'விதியா', 'மதியா' (அ) 'மனமா' என்ற குழப்பத்தில்... இறுதியில் மனம் சொன்னது "உன் தனிமையை உரித்தாக்கு விதியை உன் மதியால் நெறியாக்கு...." என அதையே ஏற்றேன்... என்றேனும் வெற்றி கிட்டும் என்ற நம்பிக்கையில்...! என்றும் அன்புடன் பவானி
ஒரு பெண்ணாய் என் வாழ்வின் முதல் ஆண்மகனே சிறு வயதில் உம் தோளை நாற்காலியாக்கி, அதில் என்னை இளவரசியாக்கி... நோய் உம்மை சூழ்ந்த போதும், விதி உம்மை ஆண்ட போதும், ஓயாமல் எனக்காக உழைத்து... எனைக்காணும் அந்நொடியில் புன்னகை பூத்து... என் ஐவிரல் பிடியில் ஒற்றை விரலால் காவலனாகி... தோளுக்கு மேல் வளர்ந்த பின்னும் தோழனாய் தோள் கொடுத்து... என் காகிதக் கிறுக்கலில் ஓவியத்தையும், என் அரைகுறை சமையலில் அறுசுவையையும், அறிந்து ... எனக்காக வாழ்பவர் தாமே ...அப்பா ! இப்படிக்கு, உமது அன்பு மகள்.
தொன்மொழியாம் எம் செம்மொழியை, செம்மையுற செதுக்கிய எம் சிற்பியே! கைம்பெண்ணின் கலக்கம் கலைத்திட , மறுமணம் கோணர்ந்த எம் மாணிக்கமே! போரெண்ணம் கொண்ட மாந்தரின் மனம்மாற...
தெரிந்தவர் சாலையில் செல்கையில், அவரது நலம் காண்பதில்லையே! தெரியாதோர் சாலையில் கிடக்கையில், உதவிட யாரும் இல்லையே! விதி விளக்காய் சிலரும் நினைக்கையில், அதனை சுற்றார் விடுவதில்லையே! பணமும் நிறைய இருக்கையில், கொடுக்க மனமும் இல்லையே! கொடுக்க மனம் தான் இருக்கையில், பணம் தான் அங்கு இல்லையே! பணம் தான் என்று சிலர் நினைக்கையில், வாழ்வில் நிம்மதி இல்லையே! இருந்தும் உதவிட நினைக்கயில், இவ்வுலகுக்கு நீதான் இறைவனே!!!
This comment has been removed by the author.
ReplyDeleteகாத்திருப்பது கூட ஒரு வகையான சுகம் தான்..
Deleteமகன் எப்போது வருவான் என்று காத்திருப்பது - அம்மா
கணவர் எப்போது வருவார் என்று காத்திருப்பது - மனைவி
காதலி எப்போது வருவாள் என்று காத்திருப்பது - காதலன்
சுகம்... சுமையான சுகம்...
Deleteஇதுபோன்ற வார்த்தைகளுக்காக காத்திருக்கும்
எழுத்தாளிணி நான்