தனிமையின் தேடல்

இன்று ஏனோ தனிமையில் என் மனம்....
எதை நாடுதோ... எதை தேடுதோ...
மனித வாழ்க்கையே புரியாத புதிரல்லவா...!
அதன் விடையை எளிதில் கண்டவர் தான் யார்...!
நானும் அதற்காகவே முயல்கிறேன்...
பதிலோ "கிடைப்பேனா?"  என்கிறது...
மனமோ "தேடுவதை விடுவாயோ? " என தவிக்கிறது...
விதியோ  "உன்னை விடுவேனோ?" என  நகைக்கிறது...
நானோ 'விதியா',  'மதியா' (அ) 'மனமா'  என்ற குழப்பத்தில்...
இறுதியில் மனம் சொன்னது
"உன் தனிமையை உரித்தாக்கு
விதியை உன் மதியால் நெறியாக்கு...."  என
அதையே ஏற்றேன்...
என்றேனும் வெற்றி கிட்டும் என்ற நம்பிக்கையில்...!


                 என்றும் அன்புடன்
                         பவானி

Comments

Popular posts from this blog

அம்மா !!!

நல்விடியல்

குட்டி அழகே!

பெண்ணே

தங்கையின் மடல்

அப்பா

மழை

வைக்கம் வீரர்

இல்லை