அம்மா !!!
உயிரை உருக்கி மெய்யை வருத்தி
உயிர்மெய்யாய்
என்னை உலகில் ஈன்றவள் அம்மா !
அச்சொல்லின் ரீங்காரம் ஒன்று போதுமே
உலகின் உயிர்கள் யாவும் அசையுமே
பேசும் மொழிகள் பலவாயினும்
எவரும் உணரும் மொழி அம்மா !
கருவறையிலே என் சுமைதன்னில் சுகம் கண்டவள்
உலகறியா என்னிடம் உலவளாவியவள்
கண்களால் காணாத போதும் என்னையே உலகாய் கொண்டவள்
என் பிஞ்சுக்கால் மிதியின் வலி அறியாதவள் அம்மா !
நான் பிறக்க தான் மறுஜென்மம் கொண்டவள்
என் நலம் காக்க தன்நலம் துறந்தவள்
நான் பசி ஆற தன் பசி மறந்தவள்
என் பிணி கண்டு இறைவனையே ஏசியவள் அம்மா !
நான் நடை பயில கைத்தடியாகி
என் முகம் மலர இசையாகி
நான் வந்த பாதையில் மலராகி
என் வலி ஏற்று தன் வலி மறப்பவள் அம்மா !
நான் போற்றும் முதல் பெண்ணே !
என் வாழ்வின் தேவதையே
நான் கண்ட கனவை தன் கனவாக்கிய
என் தாயே !................யாவும் நீயே !............. அம்மா !
-
பவானி
Nice 👌
ReplyDeleteThank you keep on reading
Delete💗
ReplyDelete♥💐
DeleteVerynice. Keep it up
ReplyDeleteThank you so much... keep on supporting 💐
Delete👌👌👌👌
ReplyDelete💓
DeleteDear really great da.... Each and every lines are fantastic...
ReplyDeleteThank you Dr... Keep on supporting ❤️
DeleteVery Good.. 👍🏼
ReplyDeleteThank you so much for your support
Delete