பெண்ணே
பெண்ணே!!! வா... மாலையாய் மலர்ந்து வா! வரும் தடைகள் பலவாயினும் அவை அனைத்தும் தாண்டி வா! வாழ்க்கையே தடம் புரண்டாலும் அதையும் ஏற்ப்பாய் முயன்று வா! உறவுகள் நிறம் மாறினாலும் உன் நிறம் மாற்றாத நிலவே வா! உன் கனவுகள் களைந்தோடினாலும் நாளைய விடியல் உனக்காக வா! ஏறும் படிக்கட்டுகள் சரிந்தாலும் மேடு பள்ளங்களை கடந்தே வா! விரியும் சிறகினை பிடுங்கி எறிந்தாலும் வீசும் தென்றலில் மிதந்தே வா! சூரியன் தன் கதிர்களை மறைத்தாலும் மின்னும் மின்மினிக்கள் மின்னும் வா! அவையாவும் ஒருவேளை மறைந்தாலும் வரும் பௌர்ணமி உனக்காக வா! என்றேனும் தொடுவாய் சிகரம் மிடுக்காய் முயன்று முன்னேறி வா!!! அன்புடன், ...