Posts

எங்கே நான்?

எங்கே நான்? என்னையே தொலைத்தது ஏன்? ஊசலாடும் இம்மனநிலை ஏன்? குணங்கெட்டு அலைவதும் ஏன்? எங்கே நான்? உற்றார் உடன் இருந்தும்       யாருமில்லா தனிமை ஏன்? ஊக்குவிக்க என்னவன் இருந்தும்      உள்ளுக்குள் புதையுண்டது ஏன்? மடியினில் மழலை இருந்தும்       மனதினில் கலக்கம் ஏன்? எங்கே நான்? சிரித்த முகம் தொலைத்து     சிடுசிடுக்கும் கண்கள் ஏன்? கற்றது கையளவு ஆயினும்       அதையும் தொலைத்தது ஏன்? தேதி கூட அறியாமல்       நாட்கள் நகர்வது ஏன்? நாட்டம் எதிலும் கொல்லாமல்      இந்த தள்ளாட்டம் ஏன்? எங்கே நான்? மண்டைக்குள் ஆயிரம் உள்ள போதிலும்       எதுவும் நடக்காதது ஏன்? முன்னோக்கிய இலக்குகள் தொலைத்து      பின்னோக்கிய இச்சிந்தனைகள் ஏன்? அனைத்திற்கும் மேலாக பவானியாகிய  நான் காணாமல் போனது ஏன்? இப்படிக்கு, உள்ளுக்குள் தொலைந்துவிட்டவள்.

குட்டி அழகே!

அடடே... என் குட்டி அழகே! நீ பெண் பிள்ளை  என்று சிலர்... நீ ஆண் பிள்ளை  என்று பலர்... எனக்கோ நீ எங்கள் பிள்ளை ஆயிற்றே!  இதில் ஆண் என்ன! பெண் என்ன!! முதல் மூன்று மாதங்களில் உண்டா இல்லையா என்று எப்படி அலைக்கழிக்க வைத்தாய்! விளம்பரங்களில் வீடியோக்களில் எல்லாம் உறுதி செய்யும் அந்த சிறு கிட்-டை கூட ஏமாற்றிய குறும்பு அல்லவா நீ! திருமணம் முடிந்ததிலேயே சந்தேகம் தீராத உன் அம்மா அப்பா-விற்கு உன் வருகைக்கு ஒரு வழியாக க்ரீன் சிக்னல் கிடைத்தது!  முதல் முறையாக ஸ்கேனில் உன் வளர்ந்து வரும் தோற்றம் கண்டு அதிசயித்து போனோம்... எங்கள் குட்டி உலகமாகிய உன் இருதய ஒளி கேட்டு எங்கள் இருதயம் துடிக்க மறந்து கண்கள் கூடே நீர்த்து போனது! ஐந்து மாதங்கள் கடந்த பின்னரும் கூட என் குட்டி தொப்பைக்குள் இருந்து கொண்டு இன்னமும் கண்ணாமூச்சி காட்டினாய்! அவ்வப்போது வரும் வாந்தி மயக்கம் கொண்டு என்னை நானே உறுதி செய்து கொண்டேன்... ஆம் நான் உன்னை சுமக்கிறேன் என்று!! ஏழு மாதங்கள் கடந்து வயிற்றில் உன் அசைவை சரியாக நாங்கள் உணர்ந்த போது, ஆகா!  அதை வர்ணிக்க வார்த்தைகள் தான் ஏது? எத்தனை ஆட்டம் காட்டினாய்... "வெளிய...

ரக்ஷபந்தன்

 நான் செய்யும் யாவும்  பொறுத்து எனை வெறுக்காமல்,  தடுமாற்றம் நிறைந்த இவ்வுலகில்  என் தடம் மற்றாமல், நம் ஊனுடல் இரத்தம்  வேறாகினும் அதை பாராமல்,  உன் உடன்பிறவா என்னிடம்  சிறிதும் பாகுபாடு காட்டாமல்,  என்றும் எனக்காக பயணித்து  உன் நிறம் மாற்றாமல்,  என் மனம் நிறைந்த   உமக்கு, ரக்ஷபந்தன் வாழ்த்துக்கள் அண்ணா!

மாற்றம்:)

மாற்றத்தில்... மாயையாய் மறைவதும்! மங்கொளி மறைந்து...  மறுபிறப்பெடுப்பதும்!  மாந்தன் தன் மார்க்கத்தின் மரபினிலே...

முகம்

காணும் கனவினில் நீ! தினம் பூக்கும் பூவிலும்  நீ!! உன்னுடன் என்றென்றும்  இருக்க ஏங்கியே தவிக்கிறேன்! காணாத உன் முகம் காண  உறக்கத்திலும்  புரளுகிறேன்!! நேரினில் உன் முகம் பூப்பாயா! என்னுடன் உன்  கை கோர்ப்பாயா!!!                   -ஏக்கதில் நான்.

காத்திருப்பு

கணங்கள் கனப்பதும்! காற்றிலே கரைவதும்! காத்திருக்கவைத்தவரை சார்ந்தது!!!❣️                                               -ச. பவானி

வெற்றிடம்

இயற்கை எழிலுடன் அழைப்பினும், அதை  காண மறுத்தது கண்கள்!  பறவைகள் பாடி பறப்பினும், அதை கேட்க  மறுத்தது செவிகள்!  பாதைகள் பரவி கிடப்பினும், அதில்  செல்ல மறுத்தது கால்கள்!  வளவிகள் வளைந்து கொடுப்பினும்,  அதை அணிந்திட  மறுத்தது கைகள்!  வார்த்தைகள் ஆயிரம் பொங்கினும், அதை  பேசிட மறுத்தது  இதழ்கள்!  பூக்கள் பூத்து குலுங்கினும், அதை  சூடிட  மறுத்தது  கூந்தல்! எல்லாம் எங்கும் இருப்பினும், அதில்  வெற்றிடம் கண்டது  நெஞ்சம்!  எங்கோ ஒளிச்சுடர்  கண்டதும்! அதில்  மாற்றம் கொண்டது மனது!!!  எனக்காய் தோன்றிய வேகம்! அதை  பற்றிக் கொண்டது தேகம்!!!  உள்ளுக்குள் ஒருவித ஓட்டம்! அதில்  ஊக்கம் கொண்டது உள்ளம்!!! இத்தனை போர்களும் மூளும்! அதை  வென்றே முயன்றிட வேண்டும்!!!  தரமாய் தடைகளும் தோன்றும்!  அதை  தகர்த்தே தொடர்ந்திட  வேண்டும்!!!                                         ...

கனவு... 2020

அன்று!  சொந்த பந்தங்கள் ஊர் சூழ, வந்த விருந்தினர்கள் வாழ்த்துரைக்க வண்ணமயமாய் கொண்டாடிய விழாக்கள்...  இன்று!  வீடியோ பதிவுகளாய் வீடு தேடி வருவதை கண்டு  மனம் வதைகிறது!!! கண்ணுக்கும் புலப்படாமல், எம்மருந்துக்கும் அடிபணியாமல், எங்கெங்கோ ஓடிக்கொண்டிருந்த  ஒவ்வொருவரையும்,  ஒன்றாய் ஒடுக்கி  ஓய்வெடுக்கவைத்த உன்னை....  கொல்லவும் முடியாமல், வெல்லவும் முடியாமல், மானுடம் தவிக்கிறது!!! சின்னஞ்சிறு செயலுக்கெல்லாம், சற்றே சீண்டி சண்டையிட்டு, சிலாகித்த என் உறவுகளையும்...  காலம் நேரம் என தடைபடாமல்,  கள்ளம் கபடம் என தடம்மாறாமல், கஷ்டம் முதல் இஷ்டம் வரை! கடமை முதல் மடமை வரை! கண்ணீர் முதல் கலக்கம் வரை!  கைகோர்த்து என்னோடு பயணித்த... என் உணர்வுகளால் ஒன்றிணைந்த உறவுகளையும்... மாதம் ஒருமுறையோ, ஆண்டுக்கு இருமுறையோ, சந்திக்கும் சந்தர்ப்பமும் தொலைந்து... எல்லாம் விதி என நினைக்கையில்...  சிலர் முகம் கனவுகளில் கலந்தாடுதே... தொழில்நுட்ப உரையாடல் உம் முகம் காட்டினாலும்!   அது  உணர்த்தாத உம் ஸ்பரிசம் என் நினைவினில் நிழலாடுதே... மாற்றம் காண மன...

சாலை விதிமுறை பற்றிய சிறார் பாடல்

அம்மா அப்பா வாருங்கள்! நான் கூறுவதை கேளுங்கள்! சாலையில் நாமும் நடக்கையில், சிறுவன் என்கை உம்பிடியில்! நடைபாதை - தனில் நடக்கனும்! வேகமாய் ஓடுதல் தவிர்க்கனும்!!   வலப்புறம் சாலையில் நடக்கணும்! இடப்புறம் வண்டியில் பயணிக்கனும்! சிகப்பு மஞ்சள் பச்சை விளக்கு, சரியாய் அதையும் கவனிக்கனும்! சிகப்பு எறிந்தால் நிறுத்திடனும்! வெள்ளை வரிக்குப்பின் நின்றிடனும்! மஞ்சள் எறிந்தால் விழித்திடனும்! முறையாய் அனைத்தயும் கவனிக்கனும்!!   பச்சை எறிந்தால் புறப்படனும்! வேகத்தில் அளவும் இருந்திடனும்!! சாலை விதிகளை மதித்திடனும்! இல்லையேல் நாம்தான்  வருந்திடனும்!!                                                     - ச.பவானி.

எத்தனை ஆயிரம்!

தோய்ந்திடும் மனதிலே ஏக்கங்கள் ஆயிரம்! அதை தாங்கிடும் நெஞ்சிலே வலிகள் பல்லாயிரம்!!! சுற்றிடும் பூமியில் இருப்பது பல ஆயிரம்! அதில் மனதை வருடிடும் வர்ணங்கள் பல்லாயிரம்!!! பொங்கிடும் கடலிலே எழும் அலைகள் நூறாயிரம்!  அதில் நித்தமும்  நீந்திடும் உயிர்கள் பல்லாயிரம்!!! பரந்திருக்கும் வானத்தில் நட்சத்திரங்கள் எத்தனை ஆயிரம்!  அதில் சீறிட்டு பறந்திடும் பக்ஷிகள் பல்லாயிரம்!!! கொழுந்தெறியும் தீயிலே எரிந்தவை எவையாயினும், அதில் எம்மாந்தரின் மாயையும் மாய்ந்தோடி போகட்டும்!!!                                                          -பவானி