Posts

Showing posts from February, 2019

நான்

அன்று நான் கொண்ட கனவுக்கு துணையாகி, இன்று நான் காணும் கனவில் நினைவாகி, என்றும் எனக்காக இருக்கும் உனக்காக நான்!!!

இல்லை

தெரிந்தவர் சாலையில்  செல்கையில், அவரது நலம் காண்பதில்லையே! தெரியாதோர் சாலையில் கிடக்கையில், உதவிட யாரும் இல்லையே! விதி விளக்காய் சிலரும்  நினைக்கையில், அதனை சுற்றார்  விடுவதில்லையே! பணமும் நிறைய இருக்கையில், கொடுக்க  மனமும் இல்லையே! கொடுக்க மனம் தான் இருக்கையில், பணம் தான் அங்கு இல்லையே! பணம் தான் என்று சிலர்  நினைக்கையில், வாழ்வில் நிம்மதி இல்லையே! இருந்தும்  உதவிட நினைக்கயில், இவ்வுலகுக்கு நீதான் இறைவனே!!!

வெற்றி

கருவறை என்னும் களத்திலே,  சிசுக்களின் சிறு போட்டியிலே,  பிறப்பது முதல்  வெற்றியே! அடுத்தது என்றும் கையிலே! வெற்றி !!! சிலருக்கு  எட்டா கனி! பலருக்கு  தெவிட்டா கனி! நான் என்று பிதற்றுகையில்,  வெற்றி என்றும்  நெருங்குதில்லை! நாம் என்று ஒன்றுகையில்,  தோல்வி நம்மை சுடுவதில்லை! முறையே நீயும் முயல்வாயானால், வெற்றியே நீயும் கொள்வாய் கண்ணே!!!                                   என்றும் அன்புடன்,                                                  நான்.